இன்று கனடியத் தேசிய வீரர் நினைவு நாள் – கார்த்திகை 11

இன்று(11) கனடியத் தேசிய வீரர்நினைவு நாள் அதனை முன்னிட்டு “கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகம்” வெளியிட்டுள்ள அறிக்கை. 

நவம்பர் 11.11.2016 வெள்ளிக் கிழமை அன்று, கனடியத் தேசிய வீரர்நினைவு நாள் ஆகும். கனடா வாழ் மக்கள் அனைவரும் கனடியத் தேசியவீரர்கள் அனைவருக்கும ; வீர வணக்கம் செய்யும் இந்த வணக்க நாள், ஒவ்வொருஆண்டும் நினைவு கூரப்படுவதை நாம் அறிவோம்.

11.11.2016 அன்று, கனடா வாழ்அனைத்து மக்களோடும், தமிழ் மக்கள் அனைவரோடும் இணைந்து நின்று கனடியத்தமிழர் நினைவெழுச்சி அகவம் தனது வீர வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கி ன்றது.

சொந்த மண்ணை விடடுப் புலம் பெயர்ந்து கனடாவில் வாழும் ; ஈழத் தமிழ்மக்களாகிய எமக்குக ; கனடிய மண் ஆதரவு தந்து வாழ வைத்துக்கொண்டிருக்கின்றது.

கனடா வாழ் ஈழத் தமிழர்களாகிய நாம், இங் கு வாழும் பல்லினப் பண்பாட்டு மக்களோடு வாழும் நல வாழ்வுக்காகக் கனடிய மண்ணை மதித்துப் போற்றுகின்றோம்.

நன்றியுணர்வோடும் ; வாழ்கின்றோம். கனடிய மண்ணுக்காகத் தாயக உணர்வோடு, தமது தேசியக் கடமையைச் செய்தகனடியத் தேசிய வீரர்கள் அனைவரையும் நாம் பொப்பி மலர் அணிந்து, வணங்கி நிற்கின்றோம்.

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம ;, 11.11. 2016 வெள்ளிக் கிழமை அன்று, கனடா வாழ் ஈழத் தமிழ் மக்கள் அனைவரோடும் இணைந்து நின்று கனடியத் தேசிய வீரர் நினைவு நாளை நினைவு கூர்கின்றது.

நன்றி.
வணக்கம்.
தமிழரின் தாயகம் தமிழீழத் தாயகம்.